நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ப.பரிமாற்ற போட்டி; இந்தியா தொடரை வென்றது!

  • Post author:
You are currently viewing நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ப.பரிமாற்ற போட்டி; இந்தியா தொடரை வென்றது!

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 பந்து பரிமாற்ற போட்டியில் இந்தியா 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 20 பந்து பரிமாற்ற தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது 20 பந்து பரிமாற்ற போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழட்சியில் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல். ராகுல் களமிறங்கினர். முதல் 2 போட்டிகளில் சோபிக்காத ரோகித் சர்மா இன்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ராகுல் 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார், மறுமுனையில் அதிரடியாக விளையாடி ரோகித் அரைசதம் கடந்து 65 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியில் 3-வது வீரராக களமிறங்கும் விராட் கோலி, இந்த முறை மாற்றத்திற்காக ஷிவம் துபேவை களமிறக்கினார்.

ஆனால் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அடுத்து வந்த ஷிரேயாஸ் ஐயர் 17 ஓட்டங்களிலும், அணித்தலைவர் விராட் கோலி 38 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 20 பந்து பரிமாற்ற முடிவில் 5 இலக்குகள் இழப்பிற்கு179 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் ஹமிஷ் பென்னட் 3 இலக்குகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து நியூசிலாந்து வீரர்கள் துடுப்பெடுத்தாடினர். நியூசிலாந்தால் 5 இலக்குகள் இழப்பிற்கு 179 ஓட்டங்களைத்தான் எடுக்க முடிந்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. நியூசிலாந்தில் அதிகபட்சமாக அணித்தலைவர் வில்லியம்சன் 95 ஓட்டங்கள் அடித்து இருந்தார்.

இதை தொடர்ந்து “சூப்பர்” பந்து பரிமாற்றம் கொடுக்கப்பட்டது. இந்தியா தரப்பில் பும்ரா வீசிய பந்து பரிமாற்றத்தில் நியூசிலாந்து 17 ஓட்டங்கள் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் சவுதி வீசிய பந்து பரிமாற்றத்தில் இந்தியா 20 ஓட்டங்கள் எடுத்தது.
“சூப்பர்” பந்து பரிமாற்றத்தில் இந்தியா 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 20 பந்து பரிமாற்ற தொடரையும் இந்தியா கைப்பற்றி உள்ளது.

பகிர்ந்துகொள்ள