நெகிழி பையில் சுற்றிய நிலையில் 6 மாத சிசுவின் சடலம் மீட்பு

You are currently viewing நெகிழி பையில் சுற்றிய நிலையில் 6 மாத சிசுவின் சடலம் மீட்பு

திருகோணமலை சீனக்குடா சிறீலங்கா காவல்துறை பிரிவிற்குட்பட்ட சின்னம்பிள்ளை சேனை பகுதியில் ஆறு மாத சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

வீடொன்றிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில்  கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த வீட்டை சோதனையிட்ட போது நெகிழி பை ஒன்றில் போடப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை சீனக்குடா சிறீலங்கா காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments