நேற்று 20 பேருக்கு தொற்றியது கொரோனா: 15 பேர் கடற்படையினர்!

You are currently viewing நேற்று 20 பேருக்கு தொற்றியது கொரோனா: 15 பேர் கடற்படையினர்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 20 பேர் நேற்றுச் செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இந்த 20 பேரில் 15 பேர் கடற்படையினர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 771 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 19 பேர் நேற்று முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை 213 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். 549 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள