நோர்வேயில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

You are currently viewing நோர்வேயில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

ஒவ்வொரு நாளும், நோர்வேயில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. கடந்த ஒருநாளில் மட்டும் 163 புதிய நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இன்றுவரை, தொற்று தொடங்கியதில் இருந்து 11,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வார தொடக்கத்தில், சில ஆய்வகங்களில் பெரிய தேவை இருப்பதாக FHI தெரிவித்துள்ளது.

நாட்டில் பல்வேறு இடங்களில் தொற்று இப்போது சற்று உயர்ந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  மொத்தம் 15 நகராட்சிகளில், தொற்று அதிகரித்து வருவதாகக் நோர்வே பத்திரிகை தெரிவித்துள்ளது.  இவை Bergen, Bærum, Kristiansand, Asker, Drammen, Fredrikstad, Stavanger, Moss, Sarpsborg, Hamar, Ullensaker, Øygarden, Lier, Sola og Råde. என பட்டியலிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள