நோர்வேயில் கொரோனா நிலவரம்!

You are currently viewing நோர்வேயில் கொரோனா நிலவரம்!

கடந்த 24 மணிநேரத்தில் நோர்வேயில் 566 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதேவேளையில் ஒஸ்லோவில் மட்டும் 126 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டப்பணப்பட்டியல் காவல்த்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

தொற்று விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டப்பணவிபரம்

போக்குவரத்தின் போது வாய்கவசம் பாவிக்கத்தவறின்:
2000kr
வாடகைக் சிற்றூர்ந்து(Taxi) பயணத்தின்போது போது வாய்கவசம் பாவிக்கத்தவறின் :2000kr

10பேருக்கு மேற்பட்டவரைக் கொண்ட தனிப்பட்ட ஒன்று கூடல்-
ஒழுங்கு செய்வோர்: 10 000 kr
கலந்து கொள்வோர்:5000kr

வெளிநாட்டு பயணத்தனிமைப்படுத்தல் விதி முறையை மீறுவோருக்கு:20 000kr

தொற்று உள்ள வருடன் பழகியதால் தரப்படும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு : 20 000kr

உணவகங்களில் மதுபான விதிமுறைகளை மீறுவோருக்கு: 20 000-50 000

ஆகவே அன்பான மக்களே உங்களை பாதுகாப்பதோடு மற்றவர்களையும் பாதுகாக்கவும்.

பகிர்ந்துகொள்ள