நோர்வேயில் மருத்துவ கருத்தரங்கு!

You are currently viewing நோர்வேயில் மருத்துவ கருத்தரங்கு!


நோர்வே தமிழர் சுகாதார அமைப்பின் (NTHO) அனுசரணையுடன் 07.03.2021 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 17:00 மணிக்கு இணையவலையூடாக
மருத்துவக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இது 24.01.2021 நடைபெற்ற கருத்தரங்கின் தொடர்ச்சியாக அமையும்.

இதுவரை கொறோனாத் தடுப்பூசிகளைப் (கோவிட்-19) பெற்றுக்கொண்ட மருத்துவத் துறைசார் பணியாளர்களின் அனுபவப் பகிர்வுடன் தடுப்பூசிகள்
சம்பந்தமான புதிய தகவல்களும் கொறோனாத் திரிபடைபு விபரங்களும், நோர்வே மற்றும் உலகநாடுகளின் மருத்துவப் பணியாளர்களால் வழங்கப்படும்.

நோர்வேயிலிருந்து இணையும் மருத்துவர்கள்:
Dr.T. Jagannivasan, Municipal chief physician

Dr. M. Ravinea, PhD, Specialising in cardiology at Diakonhjemmet Hospital

Dr. M.Mano, Chief physician at Solum Clinic

Dr.J. Arokiarani, Senior consultant in gynecology and obstetrics at Drammen hospital

டென்மார்க்கிலிருந்து இணையும் மருத்துவர்:
Dr. C. Sumangali, Consultant dermatologist, Clinical Associate Professor. Odense university hospital , Denmark

பிரான்சிலிருந்து இணையும் மருத்துவர்:
Dr.S. Sangeethana, Physician, Jean verdier Hospital, France

இங்கிலாந்திலிருந்து இணையும் மருத்துவர்கள்:
Dr.S. Shankari, Consultant Haematologist, Basildon hospital Essex

Dr.S. Isaivani, General practitioner, The Warren Practice in Hayes, Middlesex

தமிழ்நாட்டிலிருந்து இணையும் மருத்துவர்
Dr. S. Shanmugasundram, Phd, Professor and senior consultant in orthopedic surgery

இக் கருத்தரங்கை அஸ்கர் பாறும் தமிழர் இணையமும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடமும் இணைந்து நடாத்தவுள்ளது.

பின்குறிப்பு: இக் கருத்தரங்கு பதிவுசெய்யப்பட்டு எமது இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தடுப்பூசி பற்றிய வினாக்கள் இருப்பின் கீழே கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் வினவலாம்.
nthontho3@gmail.com
கருத்தரங்கிலும் வினாக்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்.

இணைய இணைப்பு விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

பகிர்ந்துகொள்ள