நோர்வேயில், 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தனிமைப்படுத்தலில்!

  • Post author:
You are currently viewing நோர்வேயில், 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தனிமைப்படுத்தலில்!

தனிமைப்படுத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு தயார்நிலை பலவீனப்படலாம் என்றும், காவல்துறையினர் விரைவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் காவல்துறை செயலகம் கூறியுள்ளது.

ஒஸ்லோ காவல்துறை ஊழியர்கள் பல சந்தர்ப்பங்களில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் இருந்ததால், இதன் விளைவாக, கூடுதலான காவல்துறை அதிகாரிகள் தாங்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்களா இல்லையா என்று தெரியாமல் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: Dagbladet

பகிர்ந்துகொள்ள