நோர்வே காவல்த்துறை பொதுமக்களுக்கான சேவையை நிறுத்தியுள்ளது!

You are currently viewing நோர்வே காவல்த்துறை பொதுமக்களுக்கான சேவையை நிறுத்தியுள்ளது!

நோர்வேயில் கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாகவும் அதனை குறைப்பதற்கான முன்னேற்பாடாகவும் பல்கலைக்கழகங்கள் பாடசாலைகள் மழலையர் பூங்கா போன்றன இருவாரங்களுக்கு நிறுத்தப்படுவதாக அரசாங்கத்தின் அறிவிப்பை தொடர்ந்து காவல்த்துறையின் பொதுமக்களுக்கான நாளாந்த அலுவலக சேவையும்(உ+ம் கடவுச்சீட்டு விண்ணப்பித்தல் புதுப்பித்தல் முறைப்பாடுகள்) இருவாரங்களுக்கு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஏற்பட்டிருக்கும் அபாயநிலையை கருத்தில் கொண்டு நாடுமுழுவதும் காவல்த்துறை கண்காணிப்போடு இருப்பதாகவும் காவல்த்துறையின் மேலதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நோர்வேயில் இதுவரை 800 பேர் தொற்றுக்குள்ளாகி இருப்பதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள