படகில் பிரான்ஸ், அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 25 பேர் கைது!!

You are currently viewing படகில் பிரான்ஸ், அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 25 பேர் கைது!!

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முயன்ற 25 பேரை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் கடல்சார் குற்றப் பிரிவு கைது செய்துள்ளது

மூன்று நாள் சிறப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பரந்தன், பருத்தித்துறை, நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தக் குழுவில் பெரும்பாலானவர்கள் பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச் செல்லத் தயாராக இருந்தனர்.

நீண்ட காலமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற மோசடிகளில் கண்காணிப்பு நடத்திய பிறகு, இதை ஒடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுடன் வேலை தேடியவர்கள் மற்றும் சட்டவிரோதமாக மற்ற நாடுகளுக்கு பயணம் செய்ய முயன்றவர்கள், உள்ளதாக அவர் கூறினார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments