பட்டா மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் பலி!

You are currently viewing பட்டா மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் பலி!

திருகோணமலை- சம்பூர் நாவலடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் – பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மூதூர்-சம்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவராசா நவநீதன் வயது (28) எனவும் சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் சடலம் தற்போது சம்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பட்டா வாகனத்தைச் செலுத்திச் சென்ற நபரை சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments