பணத்தாள்களை பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

You are currently viewing பணத்தாள்களை பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

பணத்தாள்களை பயன்படுத்திய உடன் கைகளை நன்கு கழுவுமாறு இலங்கை அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பணத்தாள்களில் நீண்ட நாட்கள் வாழக் கூடும் என்பதனால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் வீட்டில் உள்ளர்கள் அனைவரும் பணத்தாள்களை பயன்படுத்துவதனை தவிர்க்க வேண்டும். வீட்டில் ஒருவர் அல்லது இருவர் மாத்திரம் பணத்தாள்களை பயன்படுத்த வேண்டும் என சிறீலங்கா அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள