பண்ணைக் காவலாளி சடலமாக மீட்பு!

You are currently viewing பண்ணைக் காவலாளி சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – கொம்மாதுறையில் உள்ள தீவுப்பகுதியில் உள்ள பண்ணையின் காவலாளி நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர்ப்பற்று ஒருமுலைச்சோலை கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த 53 வயதான கனகரெட்ணம் தியாகராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொம்மாதுறை தீவுப்பகுதியில் உள்ள கால்நடைப் பண்ணையில் ஒன்றில் இவர் கூலித்தொழிலாளியாக சுமார் 05 வருடமாக வேலை புரிந்துவருவதாகவும் நேற்றுக் காலை தனது வீட்டிலிருந்து வேலைக்கு வருகை தந்திருந்ததாகவும் வேலை புரியும் குறித்த இடத்தில் தகராறுகள் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடயவியல் சிறீலங்கா காவல்த்துறையினர் மற்றும் ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தினை பிரேதப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் சிறீலங்கா காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments