பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 9 பேர் விடுதலை!

You are currently viewing பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 9 பேர் விடுதலை!

முல்லைத்தீவு- ஒட்டிசுட்டான் பகுதியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பெயரில், கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களில் 9 சந்தேக நபர்கள் ஐந்து வருடங்களின் பின்னர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

குறிப்பாக 1.விஜயகுமார் கேதீஸ்வரன் 2.அரியரத்தினம்காந்தராசா 3.அன்பரசன் ஹரிஹர ராஜ் 4.இளங்கரத்தினம் 5.கிருஷ்ணசாமி முத்து ராசா 6.ரூபகாந்தன் 7.ரகுவரன் 8.உதயசீலன் 9.புஷ்ப தேவன் ஆகியோரே, எவ்வித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாத நிலையில் விடுதலை செய்யப்பட்டார்கள் .

சட்டத்தரணிகள், ரத்னவேல் கணேஸ்வரன் ஆகியோரின் தீவிர முயற்சியினால் இவர்கள் விடுவிக்கப்பட்டனர் .

மிகுதியான இருவரும் விடுவிப்பதற்காக சட்டத்தரணிகள் இருவரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் . அவர்கள் வெகு விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என சட்டத்தரணிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments