பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; 10 பயங்கரவாதிகள் சுட்டு கொலை!

  • Post author:
You are currently viewing பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; 10 பயங்கரவாதிகள் சுட்டு கொலை!

எகிப்தில் பயங்கரவாத தாக்குதலை முறியடித்த ராணுவ வீரர்கள் 10 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்.

எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முகமது மோர்சி கடந்த 2013ம் ஆண்டு ஜூலையில் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.  இதனை அடுத்து அந்நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கீழ் செயல்படும் சினாய் நகரை அடிப்படையாக கொண்ட பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

இதில் நூற்றுக்கணக்கான போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  இதனிடையே, வாகனம் ஒன்றில் வந்த பயங்கரவாத குழுவினர் வட சினாய் நகரில் சோதனை சாவடி ஒன்றின் மீது தாக்குதலில் ஈடுபட முயன்றது.

எனினும், பயங்கரவாத தாக்குதலை முறியடித்த ராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  2 அதிகாரிகள் உள்பட படையினருக்கும் காயங்கள் ஏற்பட்டு உள்ளன.  இதன்பின் பயங்கரவாதிகளை தேடும் பணியும் நடந்து வருகிறது.

பகிர்ந்துகொள்ள