பயணக் கட்டுப்பாட்டை மீறுவோரை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள்!

You are currently viewing பயணக் கட்டுப்பாட்டை மீறுவோரை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள்!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறுகின்றவர்களை கண்காணிப்பதற்காக கொழும்பு மற்றும் சனநெரிசல் அதிகமாகவுள்ள தொடர்மாடி குடியிருப்பு பகுதிகளில் இன்று முதல் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்மூலம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவேர் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன எச்சரித்துள்ளார்.

ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோரைக் கண்காணிக்கும் பணியில் விசேட பணிக்குழுவினர் மற்றும் பொலிஸார் ஈடுபடவுள்ளனர்.

அடுத்த சில நாட்கள் முக்கியமானவை என்பதால் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. பொதுமக்கள் அத்தியாவசிய தேவை தவிர வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 369 பேர் நேற்றுக் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments