பருத்தித்துறையில் குழு மோதல்! – ஐந்து பேர் மந்திகையில்!

You are currently viewing பருத்தித்துறையில் குழு மோதல்! – ஐந்து பேர் மந்திகையில்!

பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை ,கொட்டடியை சேர்ந்த சிறிமுருகன் சிறிஅஜன் (வயது- 23) , வியாபாரிமூலையை சேர்ந்த தேவநாயகம் பிரேம்ராஜ் (வயது-30) , சுப்பர் மடம் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜீவநாயகம் ராஜீவன் (வயது- 26), பொன்னம்பலம் ரகுநாதன் (வயது- 39) மற்றும் தனபாலசிங்கம் குலசிங்கம் (வயது- 41) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

கடற்தொழிலில் ஏற்பட்ட முரண்பாடே மோதலாக மாறியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், தாம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பருத்தித்துறை சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments