பிரித்தானிய விமானங்களுக்கான தடை நீக்கப்படுகிறது!

You are currently viewing பிரித்தானிய விமானங்களுக்கான தடை நீக்கப்படுகிறது!

பிரித்தானியாவிலிருந்து புறப்படும் விமானங்கள், நோர்வேயில் தரையிறங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, 02.01.2021 அன்றும் மாலை 17:00 மணியிலிருந்து நீக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் அவதானிக்கப்பட்ட, பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸின் பரவலை தடுக்கும் முயற்சியாக, பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு பெரும்பாலான நாடுகள் தடை விதித்திருந்த நிலையில், நோர்வேயும் இத்தடையை விதித்திருந்தது.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து நோர்வேக்குள் வரும் அனைவருக்கும் “கொரோனா” பரிசோதனை செய்யப்படவேண்டும் என அரசு கட்டளையிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள