பிருத்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39,369 ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing பிருத்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39,369 ஆக உயர்வு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 6,438,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 380,066 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் அமெரிக்காவை மிகவும் பாதித்துள்ள இந்த வைரஸ் மற்றொரு வல்லரசு நாடான பிருத்தானியா வையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிருத்தானியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 324 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 39,369 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 46 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 2,77,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1,35,643 பேர் குணமடைந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள