பிரேசிலில் நேற்று 3,693 பேர் பலி; 93,317 பேருக்கு கொரோனா தொற்று!

You are currently viewing பிரேசிலில் நேற்று 3,693 பேர் பலி; 93,317 பேருக்கு கொரோனா தொற்று!

பிரேசிலில் கடந்த 24 மணி நேரங்களில் 93,317 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், 3,693 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய தொற்று நோயாளர்களுடன் பிரேசிலில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 33 இலட்சத்து 75 ஆயிரத்து 414 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், பிரேசில் கொரோனா மரணங்கள் 3 இலட்சத்து 48 ஆயிரத்து 718 -ஆக அதிகரித்துள்ளன.

கடந்த ஏழு நாட்களில் மட்டும் சராசரி தினசரி இறப்பு எண்ணிக்கை 2,930 ஆக பதிவாகி வருகிறது. இது கடந்த வாரத்தில் உலக நாடொன்றில் பதிவான மிக அதிக கொரோனா மரணங்களாகும்.

இதுவரை பிரேசில் மொத்த மக்கள் தொகையில் 10.47 வீதம் பேருக்கு அதாவது 2 கோடியே 21 இலட்சத்து 70 ஆயிரத்து 108 பேருக்கு கோவிட்19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள