புகையிரதத்தில் மோதி இளைஞன் பலி ; மட்டக்களப்பு – முறக்கொட்டான்சேனையில் சம்பவம்!

You are currently viewing புகையிரதத்தில் மோதி இளைஞன் பலி ; மட்டக்களப்பு – முறக்கொட்டான்சேனையில் சம்பவம்!

புகையிரத வண்டியில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு (11) சென்ற புகையிரதர வண்டியில் மோதியே இளைஞன் உயிரிழந்துள்ளான்.

இந்தச் சம்பவம் சித்தாண்டி – முறக்கொட்டான்சேனை தேவபுரம் எனும் இடத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் சித்தாண்டி – 1, அலைமகள் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய சிவகுமார் குவேந்திரன் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்துள்ள இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சந்திவெளி சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments