புதுக்குடியிருப்பில் 145 பேர் தனிமைப்படுத்தல்!

You are currently viewing புதுக்குடியிருப்பில் 145 பேர் தனிமைப்படுத்தல்!

பேலியா கொட மீன்சத்தை மூடப்பட்டதன் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 863 பேர் தனிமைப்படுதல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள் 
படையினரின் தலையீட்டுடன் இவர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளார்கள்.
இவற்றில் 145 பேர் புதுக்குடியிருப்பு திம்புலி பகுதியில் அமைந்துள்ள 68 ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு பகுதியில் 59 ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையம்,விமான்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையம் புதுக்குடியிருப்பு 68 ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில்  தெற்கினை சேர்ந்த 345 தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றார்கள்.

பகிர்ந்துகொள்ள