புதுவருட அடிதடிச்சம்பவங்களில் 15ற்கும் மேற்பட்டோர் காயம்!

You are currently viewing புதுவருட அடிதடிச்சம்பவங்களில் 15ற்கும் மேற்பட்டோர் காயம்!

வவுனியாவில் சித்திரை புதுவருடதினமான நேற்று இடம்பெற்ற அடிதடிமற்றும் விபத்துச்சம்பவங்களில் 15 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக செட்டிகுளம், ஓமந்தை,சிவபுரம் மற்றும் அவிசதப்பிட்டி ஆகிய பகுதிகளில் குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

அவற்றில் அடிதடிச்சம்பங்களே அதிகமாக பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அனேகமானவை மதுபோதையால் ஏற்ப்பட்டிருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments