பெட்டியில் முடக்கி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

You are currently viewing பெட்டியில் முடக்கி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

கொழும்பு – டாம் சந்தியில் பொதி ஒன்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது
தலை துண்டாக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலத்தை சந்தேகநபர் அவ்விடத்தில் போட்டுச் சென்றுள்ளார்
இந்த பெண்ணின் சடலம், ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்றின் ஊடாக கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு அதனை விட்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

26 வயதுடைய இந்த பெண்ணை ஹங்வெல்ல பிரதேசத்தில் கொலை செய்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்
கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையை தனியாக எடுத்துவிட்டு சடலத்தை பையில் வைத்து ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டுவரப்பட்ட பேருந்து காவல்த்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.


பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சந்தேகநபர் வேல்லவீதி ஊடாக இந்த பெண்ணின் சடலத்தை கொண்டு வரும் முறையை காவல்த்துறையினர் சிசிரீவி ஊடாக கண்டுபிடித்துள்ளனர்
பெண்ணின் சடலம் நேற்று கொழும்பு சட்ட வைத்தியரினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. சடலத்தை இன்றைய தினம் பையில் இருந்து வெளியே எடுத்து பரிசோதனைக்குட்படுத்துமாறு காவல்த்துறையினர் கேட்டுள்ளனர்.


பையில் இருந்த சடலத்தை நேற்று மாலை வரை அடையாளம் காண முடியவில்லை என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர் . அத்துடன் பிரித்து எடுக்கப்பட்ட தலை பையினுள் காணப்படவில்லை என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்
இந்த விசாரணைக்காக 3 காவல்த்துறை குழுக்கள் விசாரணை நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள