பெண்கள் 20 ப. பரிமாற்ற உலக கோப்பை ; வெற்றியுடன் தொடங்கியது இந்தியா!

  • Post author:
You are currently viewing பெண்கள் 20 ப. பரிமாற்ற உலக கோப்பை ; வெற்றியுடன் தொடங்கியது இந்தியா!

பெண்கள் 20 பந்து பரிமாற்ற உலக கோப்பை துடுப்பாட்ட போட்டியின் முதல் ஆட்டத்தில் உள்ளூர் அணியும், நடப்பு வெற்றியாளருமான ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி அதிர்ச்சி அளித்தது.

பெண்களுக்கான 7-வது 20 பந்து பரிமாற்ற உலக கோப்பை துடுப்பாட்ட போட்டி ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது.
அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடக்கும் இந்த துடுப்பாட்ட திருவிழாவில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு வெற்றியாளரான ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும்

‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

சிட்னியில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, 4 முறை வெற்றியாளரான ஆஸ்திரேலியாவுடன் மோதியது.
ஆஸ்திரேலிய அணி 19.5 பந்து பரிமாற்றங்களில் 115 ஒட்டங்களில் சுருண்டது. அந்த அணியில் 8 வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இதன் மூலம் இந்தியா 17 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த உலக கோப்பை போட்டியை அட்டகாசமாக தொடங்கியுள்ளது.

பகிர்ந்துகொள்ள