பெண்கள் 32 பேர் உட்பட கொரோனாவுக்கு 54 பேர் மரணம்!

You are currently viewing பெண்கள் 32 பேர் உட்பட கொரோனாவுக்கு 54 பேர் மரணம்!

இலங்கையில் மேலும் 54 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த மரணங்கள் தொடர்பான விபரங்கள் இன்று காலை வெளியாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் தகவலை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறித்த மரணங்கள தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் நேற்றைய தினம் (08) அறிவிக்கப்பட்ட 54 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன. இலங்கையில் இதுவரையான நாடகளில் முதல் முறையாக 50 ஐ கடந்த கொவிட்-19 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளது.

குறித்த 54 மரணங்களில் 6 மரணங்கள் வீடுகளிலேயே இடம்பெற்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது 02 மரணங்களும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 46 மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 54 மரணங்களும் மே-10 ஆம் திகதி தொடக்கம் ஜூன்-07 ஆம் திகதி வரையான நாட்களில் நிகழ்ந்துள்ளது.

இவ்வாறு பெண்கள் 32 பேர் மற்றம் ஆண்கள் 22 பேர் என 54 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இதுவரை கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 1789 இல் இருந்து 1843 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments