பெர்கன் நகராட்சி : மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் விளையாட்டு மைதானங்கள்!

  • Post author:
You are currently viewing பெர்கன் நகராட்சி : மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் விளையாட்டு மைதானங்கள்!

பெர்கன் நகராட்சி, அதன் அனைத்து வெளிப்புற மைதான வசதிகளையும் ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகளுக்காக திறக்கவுள்ளது.

பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில், ஒதுக்கப்பட்ட பயிற்சிநேர பல்வேறு வசதிகளும் மீண்டும் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்று நகராட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சுகாதார அமைப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகளுக்கான NIF அமைப்புகளின் வழிகாட்டுதல்களின்படி செய்யப்படுகின்றது.

“விளையாட்டு வீரர்கள் இரண்டு மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும், அதிகபட்சம் ஐந்து பேர் மட்டுமே மற்றும் ஒரே பொருளை பலர் தொட/ பாவிக்க முடியாது” போன்ற பாதுகாப்பு விதிமுறை நடவடிக்கைகள் இங்கு பின்பற்றப்பட வேண்டும்.

ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகளுக்காக Leikvanghallen மற்றும் Høiehallen போன்ற உள்ளரங்களைத் தவிர, ஏனைய உள்அரங்கங்கள் அனைத்தும் மூடப்படும்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள