பேருந்து சாரதிக்கு சரமாரி தாக்குதல்!

You are currently viewing பேருந்து சாரதிக்கு சரமாரி தாக்குதல்!

 

யாழ்.காரைநகர் – கொழும்பு இடையே சேவையில் ஈடுபடும் காரைநகர் இ.போ.ச சாலைக்கு சொந்தமான பேருந்தை வழிமறித்த வன்முறை கும்பல் ஒன்று பேருந்தின் மீதும் சாரதி மற்றும் நடத்துனர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றள்ளது. இது தொடர்பாக மேலும்

காரைநகரிலிருந்து கொழும்பு செல்வதற்காக யாழ்ப்பாணம் நகர்ப்பகுதி நோக்கி பேருந்து புறப்பட்ட நிலையில் காரைநகர் – பீச்றோட்டில் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் காரைநகர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை பேருந்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் 3வது சந்தர்ப்பம் இது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments