பொதுமக்களின் மனநிலையை படையினர் புரிந்து கொள்ள வேண்டும்!

You are currently viewing பொதுமக்களின் மனநிலையை படையினர் புரிந்து கொள்ள வேண்டும்!

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களின் மனநிலையை பாதுகாப்பு படையினர் புரிந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு படையினர் அதிகப்படியான பலத்தை பயன்படுத்தினால் விசாரணை நடத்துமாறு அதிகாரிகளை தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments