போதையில் உயிரை மாய்த்த குடும்ப தலைவர்

You are currently viewing போதையில் உயிரை மாய்த்த குடும்ப தலைவர்

யாழில் மதுபோதையில் மோட்டார்சைக்கிளில் அதிவேகமாக பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான புலோலி தெற்கை சேந்த இராசு புவனேஸ்வரன் (37) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இரவு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து அதிவேகமாக வேலைத்தளத்தை நோக்கி பயணித்துள்ளார்.

மந்திகை சந்தியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் பயணித்த போது மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில்இருக்கையில் இருந்து அவர் தூக்கிவீசப்பட்டார்.

இதனையடுத்து அவர் உடனடியாக பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூரப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் சிறீலங்கா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments