மட்டக்களப்பில் ஒரே நாளில் இனங்காணப்பட்ட 145 தொற்றாளர்கள்!!

You are currently viewing மட்டக்களப்பில் ஒரே நாளில் இனங்காணப்பட்ட 145 தொற்றாளர்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில்நேற்று ஒரே நாளில் 145 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தொடர்ந்து அன்ரிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் எழுமாறாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில், மட்டக்களப்பு மாநகர சுகாதாரப் பிரிவில் 23 பேருக்கும் களுவாஞ்சிக்குடி சுகாதாரப் பிரிவில் 19 பேருக்கும், வாழைச்சேனை பிரிவில் எட்டுப் பேருக்கும் காத்தான்குடி மற்றும் கோறளைப்பற்று மத்தி சுகாதாரப் பிரிவுகளில் தலா இருவருக்கும் கொாரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், ஓட்டமாவடி பிரிவில் எட்டுப் பேருக்கும், செங்கலடிப் பிரவிலி 14 பேருக்கும், ஏறாவூர் சுகாதார பிரிவில் 25 பேருக்கும், வெல்லாவெளி பிரிவில் 17 பேருக்கும் ஆரையம்பதி பிரிவில் 10 பேருக்கும், கிரானில் 10 பேருக்கும் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பயணைத் தடையை மீறி, வீட்டிலிருந்து தேவையின்றி வெளியில் செல்லவேண்டாம் என மருத்துவர் மயூரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments