மட்டக்களப்பில் 133 பேர் உட்பட கிழக்கில் 159 பேருக்கு கொரோனா!

You are currently viewing மட்டக்களப்பில் 133 பேர் உட்பட கிழக்கில் 159 பேருக்கு கொரோனா!

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் தினசரி அதிகளவு தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்ற அதேவேளை, ஏனைய இரு மாவட்டங்களில் தொற்று நோயாளர் தொகை குறைந்து பதிவாகி வருகிறது.

மட்டக்களப்பில் நேற்று 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன், அம்பாறையில் -18 மற்றும் திருகோணமலையில 08 பேருக்கும் என கிழக்கு மாகாணத்தில் நேற்று 159 பேருக்கு தொற்று உறுதியானதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் மட்டக்களப்பில் இதுவரை பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகை 4,185 ஆக அதிகரித்துள்ளது. அம்பாறையில் 3,734, திருகோணமலையில் 3,026 பேருக்கும் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டதாக தேசிய செயற்பாட்டு மையத்தின் புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments