மட்டக்களப்பு மாவட்டத்தில் 73 பேர் உட்பட கிழக்கு மாகாணத்தில் நேற்று 107 பேருக்கு கொரோனா!

You are currently viewing மட்டக்களப்பு மாவட்டத்தில் 73 பேர் உட்பட கிழக்கு மாகாணத்தில் நேற்று 107 பேருக்கு கொரோனா!

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நேற்று 107 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நேற்று 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன், அம்பாறையில் – 25, திருகோணமலையில் 10 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் நாளாந்த நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றுடன் மட்டக்கள்ப்பில் இதுவரை பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகை 2770 ஆக அதிகரித்துள்ளது. அம்பாறையில் 3251 மற்றும் திருகோணமலையில் 2647 பேருக்குக்கும் இதுவரை தொற்று உறுதியாகியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments