மட்டக்களப்பு வீதி விபத்தில் மூவர் படுகாயம்!

  • Post author:
You are currently viewing மட்டக்களப்பு வீதி விபத்தில் மூவர் படுகாயம்!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல் துறையினர்  தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை 14.12.2019 இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தின்போது காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளொன்றும் அதே திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் ஒன்றோடு ஒன்று மோதிக் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் ஒருவர் கால் உடைந்த நிலையிலும் ஏனைய இருவரும் காயமடைந்த நிலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி காவல் துறையினர்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பகிர்ந்துகொள்ள