மணல் அகழ்வு தொடர்பில் கடுமையான உத்தரவு பிறப்பித்த ஊர்காவற்றுறை நீதிமன்று!

  • Post author:
You are currently viewing மணல் அகழ்வு தொடர்பில் கடுமையான உத்தரவு பிறப்பித்த ஊர்காவற்றுறை நீதிமன்று!

ஊர்காவற்றுறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் தனியார் காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவது குறித்து முறைப்பாடு வழங்காதோரைக் கைது செய்யுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

மண்கும்பானில் மணல் அகழ்வில் ஈடுபட்டோரைத் தாக்கியதுடன் இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேர் நேற்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் முட்படுத்தப்பட்டனர். இதன்போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மணல் ஏற்றியோர் மீது சந்தேகநபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும், காணி உரிமையாளர்களின் அனுமதியுடனேயே மணல் அகழ்வு இடம்பெற்றதாகவும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மக்கள் சட்டத்தை கையில் எடுக்க முடியாது என்றும் சட்டவிரோத செயற்பாடு நடந்தால் பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறித்த நீதிபதி, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.

அத்துடன், ஊர்காவற்றுறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் தனியார் காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று காணிகளுக்குள் பள்ளம் காணப்பட்டால் அதுதொடர்பில் முறைப்பாடு வழங்காதோரைக் கைது செய்வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதிகளவு மணல் கும்பிகள் உள்ள காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்து இடமானோரை மன்றில் முற்படுத்த உனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று நீதிவான், பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

பகிர்ந்துகொள்ள