மண்டைதீவு படுகொலையின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

You are currently viewing மண்டைதீவு படுகொலையின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

மண்டைதீவு கடலில் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட 31 குருநகர் மீனவர்களின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று உறவினர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.

குருநகர் சனசமூக நிலைய முன்றிலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் நேற்று காலை 8 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொரோனாசட்டத்திற்கு புறம்பாக மக்கள் கூட்டத்தினை தவிர்க்குமாறு ஸ்ரீலங்கா அரசு அறிவித்துள்ளதுடன் வடக்கு கிழக்கு தமிழர்தாயக பகுதிகளில் மக்களை ஓன்றுகூட விடாமல் காவல்துறையினர் தடுத்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது

பகிர்ந்துகொள்ள