மத அமைப்பிற்கு பணம் கொடுத்தால், கொரோனா தாக்கத்திலிருந்து கடவுள் காப்பார்! நோர்வே கிறிஸ்தவ மத அமைப்பு பிரச்சாரம்!!

You are currently viewing மத அமைப்பிற்கு பணம் கொடுத்தால், கொரோனா தாக்கத்திலிருந்து கடவுள் காப்பார்! நோர்வே கிறிஸ்தவ மத அமைப்பு பிரச்சாரம்!!

நோர்வே மத அமைப்புக்களில் ஒன்றான “Visjon Norge” என்ற கிறிஸ்தவ மத அமைப்புதனது தொலைக்காட்சியூடான மிரச்சாரத்தின்போதுதமது மத அமைப்பிற்கு 2020 குரோணர் பணத்தினை ஒவ்வொருவரும் அன்பளிப்பாக வழங்கவேண்டும் எனவும்அவ்வாறு அன்பளிப்பவர்களையும் அவர்களது குழந்தைகளையும் கொரோனா வைரஸ் தாக்கம்திலிருந்து கடவுள் காப்பார் எனவும் தெரிவித்தது.

மேற்படி விடயம் இன்றைய நோர்வே ஊடகங்களில் பிரதான செய்தியாக வெளியாகியுள்ளதோடுமக்களினையே கடும் அதிருப்திகளையும் தோற்றுவித்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் உலகெங்கும் மக்கள் கலக்கமடைந்திருக்கும் நிலையில்மக்களின் மதநம்பிக்கையை பாவித்து பொருளாதார நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட மேற்படிபிரச்சார நடவடிக்கை பரவலான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

தமது மதநம்பிக்கை தொடர்பான வேலைத்திட்டங்களுக்காகவே மக்களிடம் பணம் கேட்டதாக மேற்படி அமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.vg.no/#/video/193196/oslo-kvinner-i-corona-karantene-vi-krysser-fingrene?utm_campaign=overlay-main-ios

பகிர்ந்துகொள்ள