மன்னாரில் 902 KG மஞ்சளுடன் இருவர் கைது!

You are currently viewing மன்னாரில் 902 KG மஞ்சளுடன் இருவர் கைது!

மன்னார், தாழ்வுப்பாடு பிரதேசத்தில் சுமார் 902 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேகநபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கைது நேற்று (02) இடம்பெற்றுள்ளது.

வடமத்தி கடற்படை கட்டளை பிரிவினரால் குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது,  கடற்கரைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான படகொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, அப்படகிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 19 சாக்குப் பைகளில் பொதி செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள