மரணமில்லா மாவீரம்!

You are currently viewing மரணமில்லா மாவீரம்!

கார்த்திகைத் திங்கள்
பூத்துக்கிடக்கிறது!
நேற்றைய நினைவுகளோடு
நெஞ்சம் ஒட்டிக்கடக்கிறது!
காய்ந்து போகாத
வீரத்தின் உச்சம்
உரிமைக்குரலை
ஓய விடாது
ஓர்மத்தில் உந்தித்
தள்ளுகிறது!

வீட்டுக்கொருவருக்கு மேல்
விடுதலையின்
வித்தாகி விதைக்கப்பட்ட நிலத்தில்
வேட்டை நாய்களின்
கால்களின்
தடங்கள்
பரவிக்கிடக்கிறது!

நாட்டை பிடிக்க கூடவே போனோரின்
முறிந்த முள்ளந்தண்டுகளில்
அடிமைச் சகதிகள்
ஒட்டி அழுக்குகள் புறந்தள்ளுகின்றபோதும்
உயிர்ப்போடு நிற்கும்
உரிமைப்போருக்குள்
உயரிய எண்ணங்களின்
அளப்பரிய தியாகங்களும்
நிறைந்து கிடக்கிறது!

விடவே கூடாது என்ற
உறுதியின் நிலைப்பாடு
காலில் மிதிபடும்
சருகுகளை நொருக்கி
நகர்கிறது!

உண்மைக்காய்
உழைப்பவன்
நாவில் தளதளப்பு
இருக்காது!

மண்ணை மனசார நேசிப்பவனுக்கு
மனச்சிதறல் முளைக்காது!

எண்ணத்தில்
எட்டப்பன் சிந்தனை
தைக்காது!


துணிந்து நின்றால்
வார்தைகளில்
தெளிவும் வற்றாது!

மாவீரர் வழி நீ
விளித்து நின்றால்
நேர்மை குன்றாது!

✍தூயவன்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments