மல்லாகத்தில் தவறான முடிவினால் இளைஞன் பலி!

You are currently viewing மல்லாகத்தில்  தவறான முடிவினால் இளைஞன் பலி!

தெல்லிப்பழை சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட மல்லாகம் 8ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 30 வயதுடைய ஆண் ஒருவருடைய சடலமே நேற்று  இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

உறவினர்கள் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தவேளை குறித்த நபர் தூக்கில் சடலமாக இருந்ததை அவதானித்தனர்.

அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை சிறீலங்கா காவற்துறை நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

அவ்விடத்திற்கு விரைந்த சிறீலங்கா காவற்துறையினர் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments