மல்லாகத்தில் ஹெரோயினுடன் மூவர் கைது!

You are currently viewing மல்லாகத்தில் ஹெரோயினுடன் மூவர் கைது!

கைது செய்யப்பட்ட பெண்ணை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காங்கேசன்துறை சிறீலங்கா விசேட குற்றத்தடுப்பு காவற்துறைனால் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர் மல்லாகம் சந்திப் பகுதியில் கைது நேற்று மாலை செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான பொலிஸ் பரிசோதகர் மதுரங்க தலைமையிலான காவற்துறை குழுவினர் இவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 32 மற்றும் 23, 25 வயது உடைய நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடமிருந்து 50 மில்லி கிராம் 60 மில்லி கிராம் 65 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்கள் யாழ்ப்பாண நல்லூர் மற்றும் கொக்குவில் – குளப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments