மாட்டுடன் மோதி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் பலி!

You are currently viewing மாட்டுடன் மோதி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் பலி!

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்திருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று சாவடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில் மடுவிலிருந்து, மல்லாவி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகினர்.

விபத்தில் படுகாயமடைந்திருந்த இளைஞர் ஒருவர் மல்லாவி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை சாவடைந்துள்ளார்.

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த தாணுயன் வயது 19 என்ற இளைஞரே சாவடைந்துள்ளதுடன், மற்றயநபர் சிறு காயங்களிற்கு உள்ளாகினார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

பகிர்ந்துகொள்ள