மின்சாரம் தாக்கியதில் குடும்ப பெண்ணொருவர் மரணம்!

You are currently viewing மின்சாரம் தாக்கியதில் குடும்ப பெண்ணொருவர் மரணம்!
????????????????????????????????????

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காவத்தமுனையில் மின்சாரம் தாக்கியதில் குடும்ப பெண்ணொருவர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

காவத்தமுனை மையவாடி வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான அகமது உசனார் லத்தீபா (வயது 51) என்ற குடும்ப பெண்ணே உயிரிழந்துள்ளார்.

புதன்கிழமை அதிகாலை 6 மணியளவில் வீட்டு வேலைகளை செய்வதற்காக வெளியில் வந்து வீட்டிற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தின் கம்பியில் கை வைத்த சமயத்தில் மின்சார ஒழுங்கு காரணமாக மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மின்சார வயர் முன் கூடாரத்திலுள்ள தகரத்தின் பட்டு சிதைவடைந்து இருந்த நிலையில் மின்சாரம் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

மின்சாரம் தாக்கிய பெண்ணை குடும்ப உறவினர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments