மிரட்டும் கொரோனா: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 397 பேரை பலியெடுத்தது!

You are currently viewing மிரட்டும் கொரோனா: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 397 பேரை பலியெடுத்தது!

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 397 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 19 ஆயிரத்தை கடந்து அதிகரித்துள்ளது.

நேற்று (மே-20) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று மலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றுதியானவர்களது எண்ணிக்கை 35 ஆயிரத்து 570 ஆக பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 6 ஆயிரத்து 73 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி 73 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் சென்னையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 4 இலட்சத்து 62 ஆயிரத்து 448 ஆகவும் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 6 ஆயிரத்து 105 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 17 இலட்சத்து 34 ஆயிரத்து 804 ஆக அதிகரித்து முதல் முறையாக 17 இலட்சத்தை கடந்து உச்சம் பெற்றுள்ளது.

அத்துடன் சிகிச்சை பலனின்றி மேலும் 397 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையான நாட்களில் ஒரே நாளில் அதிகூடிய எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகிய நாளாக அமைந்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்து 19 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 63 ஆயிரத்து 390 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments