முகமாலை பகுதிக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

You are currently viewing முகமாலை பகுதிக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

வெடிபொருள்கள் அபாயமென அடையாளப்படுத்தப்பட்டுள்ள , முகமாலை, மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில், கால்நடைகளை வைத்துப் பராமரிப்பதையும் பொதுமக்களின் நடமாட்டங்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்துக்குட்பட்ட முகமாலை, அதனை அண்டிய பகுதிகள், வெடிபொருள்கள் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான பிரதேசங்களாக அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ளன.
இப்பிரதேசங்களில், தொடர்ச்சியாக வெடிபொருள்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், வெடிபொருள்கள் அகற்றப்படாத பகுதிகளில், கால்நடைகளைப் பராமரித்தல், பொதுமக்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாக, தெரிவிக்கபடுகின்றது.
குறிப்பாக, வெடிபொருள் அகற்றப்படாத பிரதேசங்களுக்குள் நுழைந்து, சட்டவிரோத மணல் அகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர் .
இந்நிலையில், தற்போது இந்தப் பிரதேசங்களில் நடமாட்டங்களையும் கால்நடைகளை வைத்துப் பராமரிப்பதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு, கண்ணிவெடி அகற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

பகிர்ந்துகொள்ள