முடங்கியது முல்லைத்தீவு

You are currently viewing முடங்கியது முல்லைத்தீவு

முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறுகோரி முல்லைத்தீவு மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு முன்பாக ஒன்றுகூடிய அவர்கள்,ல் முல்லைத்தீவு உண்ணாப்புலவு பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறு கோரி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குள் புகுந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் காரணமாக காவல்த்துறையினர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர் .

இந்த போராட்டத்தின் காரணமாக முல்லைத்தீவு நகரின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளது .

மேலும் இதன் காரணமாக முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், கடற்தொழில் நடவடிக்கைகளுக்கும் மீனவர்கள் செல்லவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள