முதல் முறையாக சிறீலங்காவில் வைத்தியரை தாக்கிய கொரோனா!!

You are currently viewing முதல் முறையாக சிறீலங்காவில் வைத்தியரை தாக்கிய கொரோனா!!

சிறிலங்காவில் கம்பஹா வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த இலேபெரும இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றாளர் என உறுதிப்படுத்தப்பட்ட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் பலருக்கு இந்த வைத்தியரின் தனியார் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை அளித்துள்ளமை தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், குறித்த வைத்தியரை தற்போது கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் முதன்முறையாக வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள