முல்லைத்தீவில் 356 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பில்!

You are currently viewing முல்லைத்தீவில் 356 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பில்!

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகைதந்த 356 பேர் கட்டம் கட்டமாக முல்லைத்தீவு கேப்பாபிலவில் அமைந்துள்ள இரண்டு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்.

கடந்த 02.08.2020 அன்று டுபாயில் இருந்து வருகைதந்த 91 பேரும் இங்கிலாந்தில் இருந்து வருகை தந்த 9 பேரும் கேப்பாபிலவு 59 ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

09.08.2020 அன்று டுபாயில் இருந்து வருகைதந்த 259 பேர் கேப்பாபுலவு விமானப்படைத்தளத்தில் உள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் காச்சல் காரணமாக ஒருவர் யாழ்போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் இருவர் தங்கள் வசதி கருதி கொழுப்பு தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

தற்போது 356 பேர் கேப்பாபிலவு விமானப்படைத்தளம் மற்றம் படையினரின் தனிமைப்படுத்தல் முகாம்களில் கண்காணிக்கப்படு வருகின்றார்கள்.

பகிர்ந்துகொள்ள