முல்லைத்தீவு – மல்லாவியில் குழு மோதல் – ஒருவர் பலி அறுவர் காயம்!

You are currently viewing முல்லைத்தீவு – மல்லாவியில் குழு மோதல் – ஒருவர் பலி அறுவர் காயம்!

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  திருநகர் பகுதியில் நேற்று (8) இரவு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

 இந்நிலையில் குறித்த ஆறு பேரும் மல்லாவி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மற்றும்  வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவி சிறீலங்கா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments