முல்லைத்தீவு முள்ளியவளையில் வாள்வெட்டு!

You are currently viewing முல்லைத்தீவு முள்ளியவளையில் வாள்வெட்டு!

முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முள்ளியவளை, முறிப்பு பகுதியில் தெய்வேந்திரம் புவனேந்திரராசா (42வயது) என்பவரின் வீட்டிற்குள் புகுந்த நபர் வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த வாள்வெட்டினை மேற்கொண்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் முள்ளியவளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments