முள்ளியவளையில் பாடசாலை மாணவன் ஒருவன் தற்கொலை!

You are currently viewing முள்ளியவளையில் பாடசாலை மாணவன் ஒருவன் தற்கொலை!

முல்லைத்தீவு முள்ளியவளை 04 ஆம் வட்டாரப்பகுதியில் வசித்து வரும் 19 அகவையுடைய பாடசாலை மாணவன் ஒருவன் வீட்டில் தவறான முடிவினை எடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் உயர்தரத்தில் படித்துவரும் குறித்த மாணவன் 15.08.2020 அன்று இரவு வீட்டின் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் உடலம் பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள